January 28, 2014

BANK EXAM COACHING CENTRES IN COIMBATORE TIRUNELVELI IN TAMILNADU - SBI CLERK EXAM COACHING STARTS ON SOON.


விவசாயிகள் எண்ணிக்கை 11% சரிவு

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இத்தகைய சரிவு ஏற்பட்டுள்ளதாக தொழில் சம்மேளனங்களின் கூட்டமைப்பான அசோசேம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தொழில்கள் மற்றும் சுய தொழில் மற்றும் பொதுவான வேலையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த பணிகளில் தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக பணி புரிவோர் எண்ணிக்கை 1999-2000 மற்றும் 2011-12 ஆகிய காலத்துக்கு இடையிலான காலத்தில் 60 சதவீதமாக இருந்தது 49 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அசோசேம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தொழில்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை 16 சதவீதத்திலிருந்து 23.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புற வேலைகளில் அடிப்படையிலேயே பெருத்த மாறுதல் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
கிராமப்புற வேலை அமைப்பில் ஏற்பட்டுள்ள மாறுதல் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் தனியார் மற்றும் அரசு முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அதேசமயம் வேளாண் சார்ந்த முதலீடுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கை எச்சரித்துள்ளது.
வேளாண் சார்ந்த தொழிலை நம்பியிருக்காமல் அது சார்ந்த பிற தொழில்களை கையகப்படுத்துவது தொழில் புரிவது, வர்த்தகம் மற்றும் சேவைத்துறையில் இறங்குவது ஆகிய நடவடிக்கைகளும் கிராமப்பகுதியில் அதிகரிக்கும். அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்கச் செய்வதன் மூலம்
அது தேசிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அசோசேம் பொதுச் செயலர் டி.எஸ். ரவாத் கூறினார்.
வேளாண் சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்த தனி நபர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் 26 கோடியாக இருந்த தனி நபர் எண்ணிக்கை 23 கோடியாகக் குறைந்துவிட்டது.
உற்பத்தித் துறையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 5.5 கோடியிலிருந்து 6.6 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள் ளவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. அதேபோல சேவைத் துறையில் ஈடுபட்டிருப்போர் எண்ணிக்கை 1.70 கோடியாக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

3,000 ஏடிஎம்கள்: இந்தியா போஸ்ட் திட்டம்

தபால்துறையின் அங்கமான இந்தியா போஸ்ட் நாடு முழுவதும் 3,000 ஏடிஎம்களை (தானியங்கி பணப்பட்டுவாடா மையம்) அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இது தவிர 1.35 லட்சம் சிறிய ரக ஏடிஎம்களை தமால் நிலையங்களில் அமைக்க இந்தியா போஸ்ட் முடிவு செய்துள்ளது.
வங்கி தொடங்குவற்கு அனுமதி கோரி இந்தியா போஸ்ட் விண்ணப்பித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க அனுமதிப்பது குறித்து ஆர்பிஐ பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் முதல் கட்டமாக 3 ஏடிஎம்களை சென்னை, பெங்களூர் மற்றும் டெல்லியில் பிப்ரவரி 5-ம் தேதி தொடங்க உள்ளதாக தபால்துறைச் செயலர் பத்மினி கோபிநாத் தெரிவித்துள்ளார்.
முதலாண்டில் 1,000 ஏடிஎம்கள் இந்தியா போஸ்ட் என்ற பெயரில் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.

56-வது கிராமி விருது விழா

அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய ஒலிபிடிப்பு கலைகள், அறிவியல் அகடமி சார்பில் ஆண்டுதோறும் இசைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. 1959 முதல் கிராமி விருது விழா நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் கிராமபோன் விருதுகள் என்றழைக்கப்பட்ட இந்த விருது பின்னர் கிராமி விருதாக மாறியது.
முகமூடிகள்
56-வது கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டாப்ட் பங்க் என்ற இருவர் இசைக்குழு 5 விருதுகளை அள்ளியது. மானுவல் டி ஹோமெம் கிறிஸ்டோ, தாமஸ் பேங்கால்டர் ஆகியோர் அடங்கிய அந்தக் குழுவினர் எப்போதும் ஹெல் மெட் அணிந்தே காணப்படுவர்.
பொது இடங்களில் இது வரை அவர்கள் முகத்தை வெளிகாட்டியதில்லை. கிராமி விருது விழாவிலும் அவர்கள் ஹெல்மெட்டுடன் கலந்து கொண்டனர். அவர்களின் “கெட் லக்கி”, “ரேண்டம் அக்சஸ் மெமரிஸ்” ஆகிய இசை ஆல்பங்கள் விருது களை அள்ளிக் குவித்தன. சிறந்த ஆல்பம் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் 5 விருதுகளை வென்றனர். மேடையில் விருதுகளை வாங்கிய கையோடு ரசிகர்களுக்காக அவர்கள் இன்னிசை விருந்தும் படைத்தனர்.
மேக்கல்மோர், ரயான் லெவிஸ் ராப் ஆகிய இசைக் கலைஞர்களின் “சேம் லவ்”, “தி ஹிஸ்ட்”, “திரிப்ட் ஷாப்” இசை ஆல்பங்கள் 4 விருதுகளைப் பெற்றன. நியூசிலாந்தை சேர்ந்த பாப் இசைப் பாடகி லார்டியின் (17) “ராயல்ஸ்” இசை ஆல்பம் இந்த ஆண்டின் சிறந்த பாடல், சிறந்த தனிநபர் பாடல் ஆகிய பிரிவுகளில் 2 விருதுகளைப் பெற்றது. விழாவில் புகழ்பெற்ற பாப் இசை பாடகிகள் மடோனா, பியான்ஸ் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான்
மறைந்த இந்திய சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கரின் “தி லிவிங் ரூம் செஷன்ஸ் பார்ட் 2” இசை ஆல்பமும் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆல்பம் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. விழாவில் இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் கலந்து கொண்டார். கடந்த 2010-ம் ஆண்டு கிராமி விருது விழாவில் அவர் இரண்டு விருதுகளை வென்றது நினைவுகூரத்தக்கது. இசைக் கலைஞர்கள் மட்டுமன்றி ஹாலிவுட் நடிகர், நடிகைகள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

Prime Minister to Launch National Waqf Development Corporation



Prime Minister Dr. Manmohan Singh will inaugurate National Waqf Development Corporation Limited (NAWADCO), a new Central Public Sector Enterprise under Ministry of Minority Affairs. This Corporation will prove to be an important institution for the development of Waqf properties for the community welfare particularly for Muslims in India. The establishment of NAWADCO is a follow up of Sachchar Committee recommendation. India has the largest number of Waqf properties in the world. There are more than 4.9 lakh registered Auqaf (waqf properties) and the current annual income from these properties is about Rs.163 crores. Sachar Committee has estimated that such properties, if properly developed, with a minimum return of 10%, would be capable of generating an income of Rs.12000 crore per annum.
NAWADCO will facilitate and mobilize financial resources for the development of Waqf properties for community development purposes in a joint venture with the State / Union Territory Waqf Boards and the Mutawallis. The Waqf Boards and the Muthawallis were not having the financial resources to develop the properties leading to encroachments.  Government of India has recently enacted the Waqf (Amendment) Act, 2013.This will make administration of waqf properties transparent and will provide an enabling environment for development and utilization of waqf lands for welfare of minorities.

RBI monetary policy: Hikes repo rate to 8%, adjusts reverse repo rate at 7%, holds CRR at 4%

7787_raghuram_rajan_3

Governor of the Reserve Bank of India (RBI) in his stern measure to tackle inflation has hiked repo rate yet again by 25 basis points (bps) to 8%. RBI has kept cash reserve ratio (CRR) unchanged at 4%, however, in its monetary policy review on Tuesday. The change has been extended to reverse repo rate, which stands adjusted at 7%, while the marginal standing facility (MSF) has been increased as well along with the Bank Rate at 9%.
Governor Raghuram Rajan was widely expected to hold interest rates. The rates were unchanged even in the last fiscal policy review held on 18 December. In the second quarter review on 29 October, repo rate was hiked and marginal standing facility (MSF) was cut by 25 bps each. It is evident that the move to hike repo rate is an after effect of the lately released Report of the Expert Committee to Revise and Strengthen the Monetary Policy Framework by Deputy Governor RBI, Urjit Patel. The report had recommended anchoring CPI inflation to review RBI monetary policy.